கடந்த பிப்ரவரி மாதம் 01-02-2020 அன்று காஞ்சிபுரம் மாவட்டம், சந்தவேலூர் கிராம ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இலவச மருத்துவ முகாம் இனிதே நடைபெற்றது.
தம்பி அறக்கட்டளை, ஐந்தவித்தான் அறக்கட்டளை, தாஸ்யா தொண்டு நிறுவனம் மற்றும் சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இம்மருத்துவ முகாமில், இருதய பரிசோதனை, கண் பரிசோதனை மற்றும் இலவச மருத்துவ ஆலோசனைகள் கொடுக்கப்பட்டன. மேலும் கண் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் உள்ள மக்களுக்கு இலவச கண்ணாடிகள் வழங்கப்பட்டன. இதில் 100 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பரிசோதனைகள் செய்துகொண்டு பயனடைந்தனர்.
இந்நிகழ்ச்சிக்கு, உதவியாக இருந்த பள்ளி நிர்வாகத்திற்கும், அனுமதி கொடுத்த காவல் துறையினருக்கும், முகாமில் பணியாற்றிய அனைத்து சமுதாய தொண்டர்களுக்கும் தம்பி அறக்கட்டளையின் சார்பாக நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
தம்பி அறக்கட்டளை, ஐந்தவித்தான் அறக்கட்டளை, தாஸ்யா தொண்டு நிறுவனம் மற்றும் சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இம்மருத்துவ முகாமில், இருதய பரிசோதனை, கண் பரிசோதனை மற்றும் இலவச மருத்துவ ஆலோசனைகள் கொடுக்கப்பட்டன. மேலும் கண் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் உள்ள மக்களுக்கு இலவச கண்ணாடிகள் வழங்கப்பட்டன. இதில் 100 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பரிசோதனைகள் செய்துகொண்டு பயனடைந்தனர்.
இந்நிகழ்ச்சிக்கு, உதவியாக இருந்த பள்ளி நிர்வாகத்திற்கும், அனுமதி கொடுத்த காவல் துறையினருக்கும், முகாமில் பணியாற்றிய அனைத்து சமுதாய தொண்டர்களுக்கும் தம்பி அறக்கட்டளையின் சார்பாக நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
0 comments:
Post a Comment